வால்மீகி முனிவரது இராமாயணக் காவியம் மக்களுக்குத் தருமத்தையும், நீதியையும் புகட்டும் முதற்காவியமாக விளங்கி வருகிறது. இம்மாபெரும் காவியத்தை இனிய தமிழில் காவிய ரசனை சிறிதும் குறையாது வசன ரூபமாய்ச் சுருக்கித் தயாரித்துள்ளார், திருவாளர் அ.லெ. நடராஜன் அவர்கள். இதன் முதற்பகுதி பல காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம் ஆகியவற்றுடன் இந்நூல் வெளிவருகிறது. வடமொழிப் பயிற்சி இல்லாதவர்களும் கதையின் வடமொழிப் பயிற்சி இல்லாதவர்களும் கதையின் தத்துவங்கள் முழுவதையும் எளிதில் அறியும்படி அமைந்துள்ள இந்த நூலை, சிறுவர், பெரியோர் யாவரும் படித்து ஸ்ரீ இராம்பிரானது கருணைக்குப் பாத்திரராக வேண்டுமாய் ஸ்ரீமகா சந்நிதானத்தில் அருள்புரிகிறார்கள்.