தன் தம்பியின் ஊனத்தைக் குணப்படுத்தி, 'ஒட்டம் பந்தய வீரனாக ஆக்கியே தீருவேன்!' என்று திண்ணமாக எண்ணிய இக்கதை நாயகன் வேலாயுதம், எண்ணிய எண்ணியாங்கு எய்திய காரணம், கொலம்பஸிடம் இருந்த விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இவனிடமும் இருந்தமைதாம். இந்தக் குணங்கள் இக்கதையைப் படிக்கும் சிறுவர்களிடத்திலே பதிய வெண்டும் என்பது தான் என் ஆசை.முயற்சி திருவினையாக்கும். முயன்றால் முடியாத செயவில்லை; என்ன செய்யப் போகிறோம் என்ற சரியான திட்டம்; திட்டத்தை ஒட்டியே சற்றும் விலகாமல் ஒருமுகப்பாட்டோடு தொடர்கின்ற பயணம்; இவற்றைத்தாரக மந்திரமாகக்கொண்டு செயல்படுகிறவர்களுக்கு வெற்றி நிச்சயம்.