உதவுவதுதான் மனிதக் கடமை என்ற தத்துவவாதிகள். போன்ற பல ரகம் இருக்கிறது. இவர்களால் முடியாது என சொல்ல முடியாது. அல்லது சொல்ல முடியாமல் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி ஆராயும் முன்னர் நம்மிடம் உதவி பெறுபவர்கள் எதன் அடிப்படையில் உதவி பெறுகிறார்கள்? நமக்கு உதவுவதற்கு பல காரணங்கள் இருப்பது போல அவர்களும் சில விஷயங்களின் அடிப்படையில்தான் இந்த உதவிகளைப் பெறுகிறார்கள். அவர்களின் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. இந்த நூலின் நோக்கமே. நம்மால் ஏன் முடியாது என சொல்ல முடியலிலை என்பதைத் தெரிந்து கொள்வது மட்டுமின்றி, அதை ஏன் செய்ய வேண்டும். எப்படி செய்ய வேண்டும்? எப்படி செய்தால் நமக்கு பிரச்சினைகள் வராது. 'முடியாது' என்கிற வார்த்தை ஏன் எதிர்மறையானது அல்ல என்பதை எப்படிப் புரிந்து கொள்வது போன்றவற்றைப் புரிந்து கொள்வதுநான்.