தமிழ்ப் பக்தி இலக்கியம் வைணவத்தின் நாலாயிர திவ்ய பிரபந்தம் சைவத்தின் தேவாரம் -திருவாசகம் என்ற இரண்டு பக்கங்களைக் கொண்டிருக்கிறது. இவ்விரு சமய இலக்கியங்களும் எழுப்பிய சமய -ஆன்மீகக் குரல், சமத்துவ வேட்கையின் குரலாக சமூக - ஆன்மீகத்தின் குரலாக ஒலித்தது என்பர் அறிஞர். ஆழ்வார்களின் பாடல்கள் இந்தியா முழுமையும் பக்தி இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டன என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆழ்வார்கள் சாதாரண மக்களுக்காக, சாதாரண மக்களின் மொழியில், அவர்களது நாட்டுப்புற இலக்கிய வாய்மொழி இலக்கிய நாடக்ம் மற்றும் கூத்து வகையான வடிவங்களில் பாடல்களைத் தந்தார்கள்.