மதுரைவீரன் பற்றி மரபுக்கவிதையில் வாய்மைநாதன் அவர்கள் எழுதியிருக்கும் இந்நூல் சிறப்பம்சம் மிகுந்தது. இந்நூலில் கையாளப்பட்டிருக்கும் சொல்லட்டுக்குகள் வரிக்கு வரி மெருகூட்டி இலக்கிய நயம் என்ற கோபுரத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
மதுரைவீரன் பற்றி வெளிவந்த அனைத்து நூல்களையும் நன்கு ஆய்வு செய்து நாட்டுப்புறப் பாடல் ஆய்வாளர்களையும் அணுகி நுட்பமான நோக்கு நிலையில் வாய்மைநாதன் அவர்கள் இந்நூலை ஆக்கியுள்ளார்கள்.