நமக்கு நோயே வராமலிரிக்க வேண்டுமானால், கவனம் மிகுந்த விவேகத்துடன் கூடிய சரியான உணவுப் பழக்க வழக்கம், உடல் கழிவுகளை முறையாக வெளியேற்றுதல், உடலில் அகச் சுத்தம் புறச் சுத்தங்களில் அக்கறை காண்பித்தல், இயல்புடன் கூடிய கடுமையான உழைப்பு, மனத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் போன்ற இயற்கையுடன் கூடிய வாழ்க்கை வழிமுறைகளை விடாப்பிடியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.