உலகமெங்கும் உள்ள தமிழ் வாசகர்களால் பெரிதும் ஆர்வமுடன் வரவேற்கப்படும் நாவல்களிலே ரமணிசந்திரன் நாவல்கள் குறிப்பிடத்தக்கவை என்பதை அனைவரும் அறிவார்கள். குடும்ப நிகழ்வுகளை சுவையோடு பின்னுவதிலே வல்லவர் ரமணிசந்திரன் அவர்கள். அன்றாடப் பிரச்சனைகளைச் சொல்லும் போது, அதற்கான தீர்வுகளையும் சொன்னால்தான் படிப்பவர்களின் மனம் நிறைவடையும். பயனுள்ள நூல்களைப் படித்தோம் என்ற மகிழ்ச்சி ஏற்படும். இப்படிப்பட்ட நூல்களை ரமணிசந்திரன் அவர்கள் தொடர்ந்து எழுதி வருவதால்தான் வாசகர்கள் மனதிலே நீங்கா இடம் பெற்றுள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக, 'சொர்க்கத்திலே முடிவானது' என்ற இந்த நாவலும் வாசகர்களின் மனதினை நிறைவு செய்யும். படித்து மகிழுங்கள். ரசித்து எழுதுங்கள்