சமையல் கலை என்பது அற்புதமான கலை. சமைப்பவர்கள் எல்லோரும் சமையல்காரர்கள் தான். ஆனால், வாய்க்கு ருசியாக எத்தனை பேர் சமைக்கிறார்கள் என்பதுதான் கேள்வி. சமையலில் பயன்படுத்தப்படும் பொருள்களின் அளவு, வேக்காட்டின் கால அளவு, கைப்பக்குவம், பரிமாறும் நேர்த்தி இவற்றைப் பொருத்தே சமையலின் சுவை விளங்குகிறது; நளபாகம் என்று இரசிக்கப்படுகிறது. சைவ சமையல் கலையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் துணைகொண்டு, இந்த நூலை எழுதியிருக்கிறேன்.