தினசரி... தினம் சிரி... மனிதர்களில் சிலபேர்... அவர்கள் எதைச் சொன்னாலும், செய்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கும் நமக்கு. எனக்குத் தெரிந்து ஒரு கிராமத்துப் பெரியவர். 70 வயது. இன்னும்கூட, கேலிதான், கிண்டல் பாட்டுத்தான். ஒருநாள் அவர் திண்ணையில் உட்கார்ந்து வைத்தியம் சொல்லிக்கொண்டிருந்தார். (அவருக்கு எந்த வைத்தியமும் தெரியாது.) 'நான் சொன்னபடியே செய்யி, தண்ணிய மடக்கு, மடக்குன்னு குடி. அப்புறம் பாரு என்ன நடக்குதுன்னு'. அப்போது தெருவில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தை மடாரென்று கீழே விழுந்து 'ஓ'வென்று கத்தி அழுதது. கிழவனார் குழந்தையைப் பார்த்தார். சத்தமான குரலில் 'எந்திருச்சு வாடா தூக்கி விடுறேன்' என்று கத்தினார். குழந்தை அதே வேகத்தில் எழுந்து அவரிடத்தில் ஓடி வந்தது. 'முட்டாப்பயலே... நீயா எந்திருச்சு வந்தப்பெறகு நானா தூக்கி விடுவேன் போடா'. குழந்தை குழப்பமாக அவரை பார்த்தபடி நின்றது. இது போன்ற ஜோக்ஸ் அதிகம் இந்நூலில் உள்ளது.