தேவி பக்தர்களிடம் அன்பு கொண்டவள், பக்தர்களால் அடையத்தக்கவள். அவளே முத்தொழில் புரியும் (படைத்தல், காத்தல், அழித்தல்) முக்கண்ணி (இச்சை, கிரியை, ஞானம் என்கிற மூன்று கண்கள்). தன்னை நினைத்தவர்களின் துக்கத்தை நினைத்த மாத்திரத்தில் நீக்கி விடுகிறாள். அவள் இளகிய மனத்தினள், எல்லார்க்கும் உதவுகிறவள். மகிழ்ச்சியோடு வாழ்ப வர்கள் அவளை நினைத்தால் ஆன்ம ஞானம் பெறலாம்.