அகிலத்திலுள்ள மக்கள் அஞ்ஞான இருளிலிருந்து விலகவும் துன்பங்களிலிருந்து விடுபடவும் துயரங்களிலிருந்து மீளவும் ஞானிகளும் பெரியவர்களும் ஆசாரியர்களும் மோனத் தவமிருப்பதையும் தியானத்தில் திளைத்திருப்பதையும் காண்கிறோம். நானில் மக்கள் நலமுற எல்லோரும் எல்லாச் செல்வமும் பெற்றிட அவர்கள் எல்லாவற்றையும் துறந்து, தூய வாழ்க்கை மேற்கொண்டு சதாசர்வ காலமும் இறைவனையே நினைந்து, போற்றித் தியானித்து, அந்தத் தியானத்திலேயே அவர்கள் பேரின்ப மடைவதைப் பார்க்கிறோம்.