எப்படி தியானம் செய்வது, தியானப் பொருளாக எதைக்கொள்வதை, தியானத்தில் எப்படி வெற்றியடைவது? - போன்றவற்றை விளக்கும் நூல்
தியானம் என்பது என்ன, தியானம் செய்யும் போது எதை எண்ணி தியானிப்பது, தியானம் செய்யும் முறை, அதனால் நாம் பெறும் பயன்கள், தியான வகைகள், அதன் நோக்கங்கள் போன்றவற்றுக்குரிய எளிய, அரிய விளக்கங்கள் இந்நூலில் தரப்படுள்ளன. ஆழ்கடலில், பரந்த வெளியில் எங்கோ இருக்கும் அமைதியை, பரம்பொருளை உள்ளுக்குள் உணர தியானம் அதன் ஞானம் என்ற முத்தை உங்கள் முகத்தருகே கொண்டுவந்துள்ளார் நூலாசிரியர்.
தினமும் ஓடிக்கொண்டிருக்கும் பரப்பரப்பான வாழ்வில் தியானத்துக்கு ஏது நிதானம் என்ற கேள்வி எழுவது இயல்பு. நிதானத்தை நிர்கதியாக்கிவிட்டு வாழ்வில் நிலையாக நிற்பது கடினம். ஆகவே, வாழ்வுக்கு வேண்டிய வளத்தைச் சேர்க்க உடலுக்கு வேண்டும் நலம். உடலுக்கு வேண்டிய நலத்தை அமைதி எனும் அருவத்தின் மூலம் உருவாக்குகிறது ஆன்மா. இந்த ஆன்மா எனும் அழகிய பூங்காவில் ஆண்டவனை அமரச்செய்யும் முயற்சியே தியானம். அது உங்களுக்குக் கைவர இந்நூல் துணைபுரியும்.