பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்த காலமே தமிழர் வாழ்வின் 'பொற்காலம்'. கிரேக்கப் பேரறிஞர் பிளேட்டோ சொன்னது போன்று குடும்பத்தைத் துறந்து, பெற்ற தாயையும் தள்ளி வைத்து, தனக்கென்று எதையும் சிந்திக்காமல், இந்த மண்ணின் நலனுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மகத்தான ராஜரிஷியின் 'பொற்கால ஆட்சியின்' சாதனையையும், யாரும் எளிதில் வாழமுடியாத அவருடைய வாழ்க்கை வரலாற்றையும் இன்றைய இளைய சமூகம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில், மாற்று அரசியல் மலர உரிய வழிகளைக் காண வேண்டும் என்ற கனவில், எங்களால் உருவாக்கப்பட்டதுதான் "பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சிச் சாதனைகள்" இந்த நூலில் உள்ள அனைத்துச் செய்திகளையும் ஆழ்ந்து படியுங்கள். இப்படிபட்ட ஒரு தலைவனை இன்று காணமுடிகிறதா என்று கொஞ்சம் சிந்தியுங்கள்.