என் இதயத்தில் விழுந்த கீறல்கள் சிலவற்றைத்தான் 'தங்கக்' காதல்' கதைக்கு அடித்தளமாக்கியுள்ளேன். வரம் கேட்கும் தேவதை கதைகளில் கூட, நான் கண்ட கேட்டறிந்த சில உண்மைச் சம்பவங்களையே உள்ளடக்கியுள்ளேன். ஆனால், எல்லா சம்பவங்களும் அப்படியை நிஜம் என்று கூறி விட முடியாது. ஒரு படைப்பாளனின் மனம் பாதித்த நிகழ்வுகள் அவன் படைப்புகளில் நிச்சயம் பிரதிபலிக்கவே செய்யும், எனக்கும் அவ்வாறு தான் அப்படி இல்லையெனில் அந்தப் படைப்பு ஜீவன்ற்ற ஒரு வெற்றுப் படைப்பே. அதனால் யாருக்கு என்ன பயன் இருக்க முடியும்? ஆனால், தனிப்பட்ட வகையில் எனக்கு யார் மனசையும் நோகச் செய்யும் நோக்கமில்லை.