மாலை நேர டியூஷன் முடிந்து அரவிந்த் வீட்டிற்கு வந்தபோது, அவனுடைய அம்மா புவனா தரையில் அமர்ந்து காய்கறிகளை நறுக்கிக்கொண்டே டீவீயில் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தாள். புவானாவின் கணவன் கணபதி வெளிநாட்டில் தங்கி வேலை செய்கிறான். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி, பின்னர் எலெக்ட்ரீசியானக வேலை செய்து, புவனாவை திருமணம் செய்தான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆளை பிடித்து அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்றான். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாதம் விடுமுறைக்கு வருகிறான். எட்டு வருட காண்ட்ராக்ட். இப்போது சொந்தமாக கட்டிய அந்த வீட்டில், புவனாவும், மகன் அரவிந்த்-ம் இருக்கின்றனர். அரவிந்த் தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறான். சுமாராகத்தான் படிப்பான். ஆனால் ஓரளவு மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுவான். புத்தகபையை வைத்துவிட்டு வந்து அவள் அருகில் நின்றான் அரவிந்த். இன்று முதல் புதிதாக ஒலிபரப்பாகும் புதிய சீரியலை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.