முரசொலி என்கிற நந்தவனத்தில் இருந்து பறித்தெடுக்கப்பட்ட பூக்கள் இவை.
இந்தப் பூக்களை உயிர்ப்பாகப் பூத்துத் தள்ளியிருப்பவர்... அரசியல்
ஆய்வாளரும் திராவிட இயக்கச் சிந்தனையாளருமான நமது மதிப்பிற்குரிய ஐயா....
சின்னக்குத்தூசியார் அவர்கள்தான்.
கலைஞரின் கல்லக்குடி போராட்டத் தின் சிலிர்க்க வைக்கும் தருணங்கள்
தொடங்கி... மியாட் மருத்துவமனை விழாவிற்குச் சென்ற துணை முதல்வர்
மு.க.ஸ்டாலினும் அவரது துணைவியார் சாந்தா ஸ்டாலினும்.... தாமாக முன்வந்து
உடல்தானம் செய்த நெகிழ்வான தருணங்கள் என பலவற்றையும்... ஐயா சின்னக்
குத்தூசியாரின் கட்டுரைப் பூக்கள் உலகின் காதுக்குக் கேட்கும் வண்ணம்....
உரத்துப் பேசுகின்றன.