மனம் என்ற ஒன்று இல்லாத மனிதனும் இல்லை. அதையே நன்றாக அறிந்த மனிதனும் இல்லை. மனத்தை நன்றாக அறிந்தவர்கள் யாரும் இல்லை என்றாலும் மகான்கள் ரிஷிகள் போன்றவர்கள் ஓரளவுக்கு உடலை வைத்து மனதைப் படித்துப் பல சித்து விளையாடல்களைச் செய்து காட்டியுள்ளார்கள் மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டாம். வாயுவை உயர்த்த வேண்டாம்.