அறிவியல் இன்று நாளும் வளர்ந்து புதுப்புதுத கருவிகளை மனித குலத்துக்கு வழங்கி வருகிறது.
'கற்பனைக் கெட்டாத அற்புதம்' நிகழ்ந்து வருவது கண்கூடு. அதனால் படைக்கப்படும் கருவிகள் மனிதனுக்கு ஏவலாளியாக காவலாளியாக செயல்பட்டு வருகிறது.
அத்தகைய சில வகைக் கருவிகள் பற்றி விளக்குவதே 'அறிவியல் களஞ்சியம்' எனும் இந்நூல். புதிய கண்டு பிடிப்புகள் பயனாக இன்று இல்லத்தரசிகள், மாணவ மாணவிகள், தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வகையினரும் பயனடைய்து வருகின்றனர்.
இந்நூலில் உள்ள பல்வேறு கருவிகளின் செயல்பாடுகள், பயன், அதனால் மிச்சமாகும் மனித நேரங்கள் பற்றியெல்லாம் விளக்கமாக்க் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்நூல் பள்ளி மாணவ மாணவிகள் அறிவியல் ஆற்றலைத் தூண்டவும், மேம்படுத்தவும் மிக்க பயனுள்ளதாகும்.
- எம்.எஸ். ராஜன்