நம்முடைய வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் அடிப்படை, தேவை என்ற இரண்டெழுத்துச் சொல்லே தேவை. இந்தத் தேவை என்ற இரண்டெழுத்து தேடலையும், தேடல் வாய்ப்பினையும், வாய்ப்பு முயற்சியினையும், முயற்சி முன்னேற்றத்தையும், முன்னேற்றம் பொருளாதாரத்தையும், பொருளாதாரம் மகிழ்ச்சியையும், மகிழ்ச்சி நிறைவான வாழ்வையும் வழங்கி வருகிறது. ஒவ்வொருவரும் நமது தேவை என்ன என்பதை உணரும் போது தான் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.