விக்கிரமாதித்தன் கதைகளை பல பதிப்பகங்கள் வெளியிட்டதை வாசகர்கள் நன்கு அறிவர்.
இதிலுள்ள கதைகள் அந்தக் கதைகளே அல்ல; முற்றிலும் வேறுபட்டவை.
ஆயினும் பழைய சுவடிகளை ஆய்ந்து, கதா நிகழ்ச்சிகளைச் சுவை குன்றாமல்
ஆசிரியர் கூறியுள்ளார். தவிர, இக் கதைகளுக்கு அடிப்படைக் கதை ஒன்று
சுவடியில் இருந்ததை சுவை கருதி ஒரு சிறு மாற்றத்தைத் தன் கற்பனைத் திறனோடு
மிகவும் தெளிவாக ஆசிரியர் திரு. ஏ.எஸ். வழித்துணைராமன் அவர்கள் தம் உதவி
யாளரின் ஒத்துழைப்போடு எழுதியிருப்பதைப் பாராட்டா மல் இருக்க முடியாது.
இந்நூலை எங்கள் தந்தையார் திருமிகு பழ. சிதம்பரம் அவர்களின் தாமரைத் தாள்களை வணங்கி வாசக நேயர்களுக்கு காணிக்கை யாக்குகிறோம்.
வழக்கம் போல் வாசக நேயர்கள் இந்நூலையும் வாங்கி ஆதரிக்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.