தமிழ் எழுத்தாளர் ஜி.எஸ்.பாலகிருஷ்ணன், 60 ஆண்டுகால எழுத்துப்பணியில்
ஈடுபட்டு, தனது 90வது வயதில் 2018ம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி வால்மீகி
நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். தொழிலால் ஆங்கில ஆசிரியரும், தமிழ்
மொழி எழுத்தாளருமான திரு.பாலகிருஷ்ணன் அவரது எழுத்துலக பயணத்தை தானே சுயமாக
கற்றுக்கொண்டார். 1940களில் தொடங்கிய தனது வாழ்க்கையில் 500க்கும்
மேற்பட்ட சிறுகதைகளை தமிழில் எழுதியுள்ளார். மேலும், கணையாழி, குமுதம்,
ஆனந்த விகடன், கல்கி, கலைமகள் மற்றும் அமுதசுரபி உள்ளிட்ட இலக்கிய மற்றும்
பிரபலமான இதழ்களில் வெளிவந்த அவரது படைப்புகளுடன் பல நாவல்கள் மற்றும்
குறும்படங்களை எழுதியுள்ளார். நகைச்சுவை, தத்துவம், மருத்துவ நெறிமுறைகள்,
தேசபக்தி, காதல், நம்பிக்கை மற்றும் ஏமாற்றம் - என அவரது சிறுகதைகள் பல்வகை
தளங்களை கொண்டுள்ளன. அலையன்ஸ் பப்ளிஷர்ஸ் சிறுகதைகளின் தொகுப்புகள்
மற்றும் நகைச்சுவை பற்றிய அறிமுகக் கட்டுரை உட்பட அவரது பல தமிழ்
புத்தகங்களை வெளியிட்டது. சிறந்த நகைச்சுவைக் கதைக்கான கல்கி-பெர்க்லி
விருதை மற்ற விருதுகள் மற்றும் அங்கீகாரங்களுடன் அவர் பெற்றுள்ளார்.
திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் நகைச்சுவை பாணியை கல்கி, எஸ்.வி.வி, தேவன்,
நாடோடி மற்றும் சாவி போன்ற இலக்கியவாதிகளின் வரிசையில் புகழ்பெற்ற தமிழ்
எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன், குறிப்பிட்டிருந்தார்.