கோட்டயம் புஷ்பநாத்தின் வித்தியாசமான நாவல் இது. மாந்திரீகம், திகில், துப்பறியும் நாவல், ஆக்ஷன், கிரைம் என்று பல்வேறு வகைகளிலும் எழுதியுள்ள அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சமூகநாவல்! கிராம்ப் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு ஆசிரியர் ஒருவர் மாற்றலாகி வருகிறார். திருமணமாகாத அரச குல வாரிசு அவர். அந்த கிராமத்தில் அவர் இரண்டு பெண்களை சந்திக்க நேர்கிறது. இந்தப் பெண்கள் இருவரும் கணவனைத் தொலைத்தவர்கள்; ஒரு போதும் தங்கள் கணவரைத் திரும்பப் பெற முடியாதவர்கள்.பிரமசாரி ஆசிரியரது வாழ்க்கையில் இந்த இரு பெண்களும் ஒரு கால கட்டம் வரை பயணம் செய்கின்றனர். இந்த மூவரின் மனப்போராட்டங்களையும், வாழ்க்கைச் சூழலையும் இயல்பாக நகர்த்திச் செல்கிறார் கோட்டயம் புஷ்பநாத். மூல ஆசிரியர் எழுதியவற்றில் அவருக்கு மிகவும் பிடித்தமான நாவல்களில் இதுவும் ஒன்று என்று என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார். மனித வாழ்க்கையின் நடைமுறைகள், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், இவற்றுக்கு உட்பட்டோ... எல்லை கடந்தோ நிகழும் விதிமுறை மீறல்களும், விதிவிலக்குகளும் இந்த நாவலில் பரவலாக ஆங்காங்கே விவாதிக்கப்படுகின்றன.