படைப்பின் அற்புதத் தருணங்கள் (மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்கள் பற்றி ஓர் அறிமுகம்)
மார்க்சியர்கள் சோஷலிசப் பொருளாதாரம் என்பதை முன்வைத்து இன்னும் ஆழமாகப் பேசவேண்டிய தருணம் இது. மார்க்சியத்தின் தேவை அதிகமாகி உள்ள சூழலில்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 'மார்க்ஸ் 200' என 20 தொகுதிகளாக என்சிபிஎச் வெளியிட்ட தொகுப்பு மற்றும் அதில் அடங்கிய, தமிழின் முக்கிய மார்க்சிய அறிஞர்களில் ஒருவரான முனைவர் பேராசிரியர் ந.முத்துமோகன் அவர்களின் குறிப்புகள் ஆகியன இன்று முக்கியத்துவம் பெறுகின்றன.
மார்க்ஸ், எங்கல்சின் இந்தத் தொகுப்புகளை முழுமையாகப் படிக்க இயலாதவர்களுக்கும் கூட அவற்றின் உள்ளடக்கம் குறித்த அறிமுகமாக எழுதப்பட்ட இந்த நூற்தொகுப்பு மிகவும் பயனுடையதாக இருக்கும். வாய்ப்புள்ள தோழர்கள் மார்க்ஸ், எங்கல்ஸின் முக்கியப் படைப்புகளை வாசிக்க நேரும்போது முத்துமோகனின் இந்த நூல் அறிமுகங்களை முன்னதாக வாசித்து அவற்றின் உள்ளடக்கங்கள் குறித்த ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்வது பயன் தரும். இந்நூல் முக்கியமான ஒன்று மட்டுமல்ல. தன்ளைவில் முழுமையானதும் கூட.
- அ. மார்க்ஸ்