அறிவியல் அற்புதங்கள் என்ற இந்நூலில் அதன் ஆசிரியர்
திரு. பா. பொன்னுசாமி அவர்கள் தமது முன்னுரையில் கீழ்கண்டவாறு கூறுகிறார்.
அற்புதங்கள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அற்புதத்தைக் காண
எங்கோ போகவேண்டிய அவசியமில்லை. உதாரணமாக அற்புதம் மனித உடலிலேயே தினமும்
நடந்து கொண்டுதான் இருக்கிறது .
நாம் சாப்பிடும் உணவு இரத்தமாக மாறுவது ஓர் அற்புதம் தானே . இது நாம்
காணாமல் நடைபெறுவதாகும்.
சில நிகழ்வுகள் நம் கண் முன்னரே நடைபெறுகின்றன. அவை நாம் நம்ப
முடியாதவாரும் அமைகின்றன. வியப்புடன் அவைகளை காண்கிறோம், வணங்குகிறோம்.
அத்தகைய பல விஷயங்களை நாம் இந்த நூலில் காணலாம்.
மாணவர்களும் பொது மக்களும் படித்து இன்புறத் தக்க விஷயங் களைச் சுமந்து
வரும் இந்நூலினை தமிழ் உலகத்திற்கு படைத்ததில் பெருமிதம் அடைகிறேன்.