பொன்னியின் செல்வன் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் என்றாலும், பொன்னியின் செல்வன் நிகழும் காலகட்டத்தில் வாழ்ந்த நிகழ்கால வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சுழல்வதாக அமைந்தது. இந்த நூல் தமிழின் வரலாற்று புதினங்களுக்கு முன்னோடியாக அமைந்தது என்றால் மிகையில்லை.
பொன்னியின் செல்வனுக்கு இணையாக இன்று வரை எந்த ஒரு சரித்திர புதினமும் சிறப்பாக வரவில்லை என்பது உண்மை.