பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறியதே இச்சிறுநூலாகும்.கற்பனை, கவிநயம் பொருந்தியிருந்த போதிலும் ,கம்பனின் கவிதையால்,தமிழ் இன மக்கள் தன்னம்பிக்கை இழந்து, தாழ்வுணர்ச்சி பெற்றுப் பிற இன மக்களின் தாள் பற்றி வாழ்வு நடத்தும் வகை பெற்றதை விளக்கமாகக் காணலாம்.