நகராட்சித் தலைவராகப் பதவி ஏற்றபின் இவர் எப்படிச் செயல்பட்டார், என்னென்ன சிக்கல்களை எப்படிச் சமாளித்தார் என்று பல கட்டுரைகளில் இவர் எழுதியிருக்கிறார். நகராட்சி தலைவராகவோ உறுப்பினராகவோ இருக்கின்றவர்களுக்கும் இருக்க நினைப்பவர்களுக்கும் இவரது எழுத்துகள் எளிய வழியை அரிய துணிச்சலை, மிகுந்த தன்னம்பிக்கையை ஏற்படுத்தித் தரும் என்பதில் ஐயமில்லை. பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள், ஈடுபட நினைப்பவர்கள் அனைவரும் வாங்கி படிக்க வேண்டிய சிறந்த புத்தகம் இது.