'இனி' இதழ் மொழியையும் இனத்தையும் மையப்படுத்தி வெளிவந்திருந்தாலும், சாதி ஒழ்ப்பையும் பகுத்தறிவையும் உறுதியாகப் பேசியிருக்கிறது. சாதியொழிந்த தமிழ்த் தேசியத்தை மிக உறுதியாக முன்வைத்திருக்கிறது. மிக முக்கியமாக மதவெறி எதிர்ப்பு நிலையில் மிகத் தீவிரமாக நின்று சனாதன சங்பரிவார் அமைப்புகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் கண்டித்திருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இனி இதழ் தமிழ்நாட்டில் காலூன்றும் மதவெறி சூழல் குறித்து கவனமாக எச்சரித்துள்ளது வியப்பாகவும், ஆனால் அந்தச் சூழல் மாறாமல் இங்கு மேலும் தீவிரமடைந்து வந்திருக்கிறது என்பது அதிர்ச்சியாகவும் இருக்கிறது.