ஒவ்வொரு பழமொழியையும் ஒவ்வொரு பாடலின் இறுதியில் கொண்டு இலங்குவதுதான் 'பழமொழி நானூறு' என்னும் இந்நூல். நானூறு பாடல்களைக் கொண்டது இந்நூல் என்பது இதன் தலைப்பிலேயே நாம் தெரிந்து கொள்ளலாம். இந்நூலில் நானூறு பழமொழிகள் இடம் பெற்றுள்ளன.
இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும். இதனை விரும்பிக் கற்று, இந்நூலின் கருத்துக்களைத் தம் வாழ்வில் பயன்படுத்துபவரின் வாழ்க்கை நன்றாகும்.ங