உலகத்தாரால் மதிக்கப்படுகின்ற உயரிய அறங்களையும் நல்லொழுக்கங்களையும் கைக்கொண்டு இறைவன் மனிதனாக வடிவு தாங்கி, நல்லோர்களை வாழவைத்தும் தீயவர்களை அழித்தும் நடத்திய செயல்களைக் கூறுவது இராமாயணம் ஆகும். பரம்பொருளாகிய ஸ்ரீமந் நாராயணன் இராவணன் முதலான கொடிய அரக்கர்களை அழிப்பதற்காகத் தயரதன் புதல்வனாகத் திருஅவதாரம் செய்தான். பரம்பொருளின் வலக்கரத்தில் விளங்கும் சக்கராயுதம் பரதனாகவும். இடக்கரத்தில் விளங்கும் பாஞ்ச சன்னியம் என்னும் சங்கு சத்துருக்கின்னாகவும் ஆயிரம தலையுடைய ஆதிசேடன் என்னும் பாம்புப் படுக்கை இலக்குவனாகவும் திரு அவதாரம் செய்தார்கள் அத்தன்மையில் பரம்பொருளின் திருமார்பில் விளங்கும் திருமகள் சீதாப்பிராட்டியாக மிதலை நகரில் ஏர்முனையில் தோன்றி சனகள் திருமகளாக வளர்ந்து வந்தாள்.