கூர்மையான அவதானிப்பு, உலகப் பார்வை, உண்மைத் தோட்டம், மொழி நவீனம், இலக்கிய அழகு ஆகியவற்றோடு சுவை மிகுந்த சொல் முறையும் அகவிழி திறப்பு முயற்சியில் கண்ணனுக்கு உதவுகின்றன. மொழி ஆளுகையில் சித்தக்காரனின் லாவகம், இழையோடும் குறும்பு, மிகை அற்ற சொற்கள், ஆங்கில வாசனை வீசும் வாக்கிய அமைப்பு ஆகியவை கூடிவந்து, நவீன அல்புனைவு எழுத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது கண்ணனது எழுத்து.