கண்ணனின் பத்திகளில் முன்வைக்கப்படும் கருத்துகள், ஒரு விரிந்த தளத்தில் இயங்குகின்றன. அவை எழுதப்படும் சூழலையும் சந்தர்ப்பத்தையும் மட்டுமே கருத்தில் கொள்ளாமல் நிகழ்வுகளின் பின்புலங்களை நேர்மையோடு எதிர்கொள்கின்றன. மனித மனநிலை, ஊடகங்களின் அரசியல், சமூக மதிப்பீடுகள் ஆகியவற்றைப் புதிய கோணங்களில் அணுகுகின்றன.