ஆண்டவனுடைய படைப்பில் நம்முடைய வாழ்க்கையில் எதுவுமே முடியாது என்பது இல்லை. திறமை,அறிவு, ஆற்றல், அனுபவம் ஆகியவை எல்லாம் நம்மிடம் இருக்கின்ற போது எப்படி முடியாமல் போகும்.ஒவ்வொரு செயலையும் வெற்றியுடன் முடிக்க முடியும் என்பதனால்தான் முடியாது என்பது என்னுடைய அகராதியில் இல்லை. என்று நெப்போலியன் கூறினார். உலக வரலாற்று ஏடுகளிலும், உன்னதமானவர்களின் வாழ்க்கையிலும் முடியாது என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் செய்திருப்பதைக் காண முடியும். அது போல் உலக அறிஞர்கள் என்னால் முடியாது என்று எண்ணியிருந்தால், கடிகாரம் முதல் தற்கால கம்பியூட்டர் உலகம் வரை எதுவுமே நமக்குக் கிடைத்திருக்காது.