என் அன்பான வாசகர்களுக்கும், உயர்திரு. அருணன் சார் அவர்களுக்கும், அன்புடன், நன்றியுடன் வணக்கம். இது என் மூன்றாவது நாவல்! என் முதல் நாவலான உறவும், உரிமையும்-ல் ஒரு குடும்பம் குடியினால் ஏற்படும் கொடுமையால் உடை வதையும் எவ்வளவு அவமானமெனினும், சிசுக் கொலைக்கு எதிராக - பாடுபட்டு தன் மகனைக் காப்பாற்றி வளர்க்க முற்படும் ஓர் இளம் அன்னையின் போராட்டங்கள்! இரண்டாவது நாவல் 'நல்ல மனம் வேண்டும்.' ஒவ்வொரு கதாபாத்திரத்திடமும் ஒவ்வொரு விதமான அன்பு மனம், துன்பத்திலும், துயரத்திலும்கூட அன்புடன் ஒற்றுமை.கூட ஓர் 'அன்பு இல்லம்.' இந்த நாவலில், நாட்டில் நடக்கும் எல்லா அநீதிகளையும் அதை 'போலீஸ்' எப்படி தடுக்க தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து செயல்படுகின்றனர் என்பதையும், உலகம் எவ்வளவோ முன்னேறியும் - ஒரு பெண் தான் மற்றொரு பெண்ணுக்கு எதிரி என்பர். ஒரு கிழவி வயது கூடியும் வார்த்தைகளால் வதைபட்ட 'சாம்பவி'யின் மனதை எப்படிச் செல்வமும், ரெட்டியும், நளினும் தங்கள் அன்பால் மீட்கின்றனர் என்பதுதான் இக் கதையின் 'கரு.'