தமிழக அரசால் வெளியிடப்பட்ட பழைய நூலின் புதிய பதிப்பு. சைவம், வைணவம் ஆகிய
இருபெரும் சமயங்களைப் பற்றிய விரிவான தொகுப்பு. பல்லவர்கள் காலத்தில்தான்
இவ்விரு சமயங்களும் செழித்து வளர்ந்தன. பக்தி இலக்கியங்கியங்கள் தோன்றிய
காலமும் பல்லவர்கள் காலம்தான். சைவத்தின் தொன்மை, சைவ இலக்கியங்கள், சைவ
இலக்கிய வலரலாறு, மெய்கண்ட சாத்திர நூல்கள், சைவ ஆசிரியர் என சைவ சமயத்தின்
சாரத்தையும், சுருதியின் சிறப்புகள், எம்பெருமானார் வைபவம், வேதங்களும்
விஷ்ணுவின் மேன்மைகளும், இராமாயணமும் நாராயணன் மேன்மையும், கீதையின்
சாரப்பொருள், பிரம்ம சூத்திரங்களும் நாராயணனும் எனப் பல்வேறு தலைப்புகளில்
இவ்விரு சமயங்களைப் பற்றிய நுட்பமான தத்துவ - மெய்ஞானக் கருத்துகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன.