மல்லிகைப் பூக்களாய் சிரிக்கும்
உன் ரோஜாப்பூ முகத்தை..
எப்படி மண்மூடிப் புதைப்பேன்
என் மகனே?உன்னைப் பிரிந்து..
இருபத்தி ஆறு ஆண்டுகளாய்
காத்திருக்கிறேன்..நீதி கிடைக்குமென்று..!
உன்னைப் போலவேநீதியும் கொலையுண்ட
சேதி கிடைத்தது.போபாலின்மூச்சுக் காற்றை நிறுத்தியதுநுரையீரல்களில் நிரம்பிய
நச்சுக்காற்று..!பறிக்கப்பட்டஇருபத்தி அய்யாயிரம் உயிர்களின்படுகொலைகள்
விபத்தாகி விட்டது..!உனக்காவதுஉயிரை விடும் யோகம்கிடைத்தது!
உனக்கு பின்னால்-ஆறு லட்சம் குழந்தைகள்ஊனமாகப் பிறந்த அவலம்
உனக்கில்லை!ஆன்டர்சனும் அமெரிக்காவும்தப்பித்த போதும்
இதை அனுமதித்த துரோகிகள்இன்னும் உயிரோடு தான்இருக்கிறார்கள்.