இந்நூலில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், கண்ணப்ப நாயனார், மெய்ப்பொருள் நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரின் கதைகள் எளிய உரைநடையில் நாடகக் காட்சிகளாகத் தரப்பட்டுள்ளன. நாடக நூல்கள் வெளிவருவது தமிழ்த் தாய்க்கு அணி செய்வதாகும். மேடை நாடகமாக நடிக்கும் பாங்கில் அமைக்கப்பட்ட இந்நூல் சிறுவர்களுக்குப் பெரிதும் பயன்படும்.