மனிதப்
பிறவியின் மகத்துவத்தைப் பற்றி அறிஞர்கள் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
அவற்றுள் தலையாயது சிரிப்பு. இது ஒரு மனித நேயம். மாக்களிலிருந்து மக்களை
வேறுபடுத்திக் காட்டக்கூடிய பண்பு. மனிதர்களுக்கே உரிய சொத்து.நாம்
வாழ்க்கையில் அன்றாடம் பல பிரச்சனைகளைச் சந்திக்கிறோம். அதனால் உடல்
சோர்வும், உள்ளச் சோர்வும் அடைகிறோம். உடல் சோர்வுக்கு உறக்கமும், உள்ளச்
சோர்வுக்கு மகிழ்ச்சியும்தான் சிறந்த மருந்தாகும்.சிரிப்பதால் மனக் கவலை
நீங்குகிறது. உள்ளம் தெளிவு பெறுகிறது. ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது.
ஆயுள் நீடிக்கிறது. உயிர் ஒரு தெய்வீகத் தன்மையை அடைகிறது.