நெப்போலியன் ஹில்லின் எழுத்துகளைப் படித்து பயன்பெற்ற உலகெங்கிலும் உள்ள
கோடிக்கணக்கான வாசகர்களில் ஒருவராக நீங்கள் இருக்க்க் கூடும்.
நீங்கள் ஹில்லின் போதனைகளைப் பின்பற்றும் விசிறியாக இருந்தாலும் சரி,
இதுதான் நீங்கள் வாசிக்கும்வரது முதல் நூலாக இருந்தாலும் சரி, மனித ஆற்றலை
வெளிப்படுத்த உதவும் இம்முறைகள் உங்களுக்கு மிகவும் பயன்தரும்.
எண்பது வருடங்களுக்கு முன் ஹில், ஆராய்ச்சி செய்து எழுதிய எழுத்துகளை
அடிப்படையாக வைத்துத்தான் இன்று வெளிவரும் எல்லா சுய முன்னேற்ற நூல்களும்
எழுதப்படுகின்றன என்பதும் ஹில் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்ற
உண்மையை நிரூபிக்கிறது.
இன்று ஹில்லின் கருத்துகளை மேற்கோள்காட்டி எழுதப்படும் நூல்கள்
ஆயிரக்கணக்கில் வெளிவருகின்றன. இதுவரை வாழ்ந்த சுயமுன்னேற்ற பேச்சாளர்
அல்லது எழுத்தாளர்களிலேயே இவர்தான் உன்னதமானவர் என்பதில் எவ்வித சந்தேகமும்
இல்லை.