பள்ளிச் சிறுவர்களையும் , காட்டு விலங்குகளையும் பற்றிய கதைகள் ' மானைத் துரத்திய புலி' கதைத் தொகுப்பில் உள்ளன. பள்ளிச் சிறுவர்கள் மலைவாழ் சிறுவன் நீலனுடன் காட்டின் இயற்கையையும், விலங்குகளின் இயல்புகளையும் நேரில் கண்டு இரசிப்பதற்குச் செல்கிறார்கள். பலபல விசயங்களைக் காணுகிறார்கள். நீலனின் அறிவைக் கண்டு வியக்கிறார்கள்.
காட்டு விலங்குகள் கதைமாந்தர்களாக வரும் கதைகள் எக்காலத்தும் சிறுவர்களுக்குப் பிடித்தமானவை. எளிய விலங்குகள் ஒற்றுமையின் மூலம் வலிய விலங்குகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் போது சிறுவர்கள் மகிழ்ச்சிக் கொள்வார்கள். இப்படிப்பட்ட பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
- பதிப்பகத்தார்.