ஒடி ஒடி உழைக்கணும்' என்ற இந்தச் சிறுவர் சிறுகதை நூலில் இருபது கதைகள் உள்ளன. இவை ஒரு நாளுக்கு ஒரு கதையாக இருபது நாள்களில் எழுதப்பட்டவை. சிறுவர்களுக்கான இலக்கியமே ஒரு நாட்டின் உயிர்நாடி. அந்தக் 'குழந்தை இலக்கியம்' ஒளவையார் காலத்தில் விதை ஊன்றப்பட்டது. அது முளைத்தது கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை காலத்தில்தான். மாக்கவி பாரதியார் அதற்குத் தண்ணீர் விட்டு வளர்த்தார். பின்னர், பல்வேறு எழுத்தாளர்களும் தண்ணீர் ஊற்றிப் பாதுகாத்து வந்தனர். செடி மரமாகி வளர்ந்தது.