சென்னை விருகம்பாக்கத்தில் வசிக்கும் இவர், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த கோட்டையூரைச் சேர்ந்தவர். வயது. 57.
1980-களில் தொடங்கி, இன்றுவரை தமிழ் பத்திரிகைகளில் ஜோக்குகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.
இந்த சிறிய நூல், இவரது ஐந்தாவது படைப்பாகும். ஏற்கனவே ஆயிரம் சிரிப்பு துணுக்குகள், சிரிப்பு மழை, ஐவரின் அதிரடி ஜோக்குகள், 700 ஜோக்குகள் என நான்கு புத்தகங்கள் வெளிவந்துள்ளன.