ஆதியும் அவனே! அந்தமும் அவனே! அன்றைய பிரம, விஷ்ணுவிலிருந்து இன்றைய
மகான்கள் வரை ஈர்த்து நிற்பது திருவண்ணாமலை என்கிற அருணாசலம். எத்தனையோ
அற்புதங்களின் உறைவிடம். அவற்றையும், அவற்றில் ஒளிந்து கிடக்கிற
தத்துவங்களையும் அழகுறச் சொல்வது 'அருணாசல புராணம்.' சைவ எல்லப்ப நாவலர்
(திருமலை நாயக்கரின் காலத்தவர்) என்பவர் இந்நூலை இயற்றினார். பதிநான்கு
சருக்கங்களில், அறுநூற்று நாற்பத்து ஒன்பது விருத்தங்களில் பாடப்பெற்ற
புராணநூல் இது. அருணாசல புராணத்தை எல்லோரும் படித்துப் பயனடையும் வண்ணம்
எளிய உரைநடையில் சுருக்கமாக தந்திருக்கின்றோம்.