உயிர்த்தொகுதியில் மனிதன் சிறந்தவனாக இருக்கிறான். அவனுக்குப் பகுத்தறிவு இருப்பதனால் கண்ணால் கண்டும் காதால் கேட்டும் பிறபொறிகளால் உணர்ந்தும் தெரிந்து கொண்டவற்றை வேறுபிற மொழிகளால் அறிந்து பிரித்து அறிந்தும், மறவாமல் நினைந்தும், தொடர்புபடுத்திச் சிந்தித்தும் வாழ்கிறான். இந்த ஆற்றல் மாட்டுக்கு இல்லை; எறும்புக்கு இல்லை.