எந்த இயக்கமும் தன் வளர்ச்சிப்
போக்கில் பல சாதனைகளை நிகழ்த்தும். பல இடையூறுகளையும் சந்திக்கும் திராவிட
இயக்கமும் இதற்கு விதிவிலக்கல்ல. எனினும், தொடக்கம் முதலே கடுமையான
எதிர்ப்புகளையும், திரிபு வாதங்களையும் இவ்வியக்கம் சந்தித்துள்ளது. ஒரு
நூற்றாண்டுக்குப் பிறகும் அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆதலால் திராவிட
இயக்கத்தின் உண்மை முகத்தினை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதே
இப்புத்தகத்தின் முதன்மை நோக்கமாகும். இன்று ‘திராவிடம்’ என்னும் சொல்
‘சமூக நீதியையே’ குறிக்கிறது என்பது வெளிப்படை. ‘திராவிடம்’ எனில்
‘சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு’ ஆகியனவே.