கோவில் நிர்வாகத்தை அரசு கட்டுப்பாட்டிலிருந்து நீக்கி, தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று ராமகோபாலன் 'பிராமண சங்கம்' இந்து முன்னணி போன்ற பார்ப்பன - பார்ப்பனிய அமைப்புகள் கூப்பாடு போடுகின்றன. பிராமணர்களில் கூட எல்லோரும் கருவறைக்குள் சென்று பூஜை செய்து விட முடியாது. அதற்குரிய ஆகம தகுதி பெற்றவர்கள்தான் பூஜை செய்ய முடியும் என்று பார்ப்பனர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் நியாயப்படுத்துகிறார்கள்.