யாதவப் பிரகாசரை குருவாகக் கொண்டவரான இவருக்கு முக்தியளிக்கும்
மந்திரத்தை அறிந்து கொள்ள பேராவல். இவரது குருவால் அதனை இவருக்கு உணர்த்த
இயலவில்லை. திருக்கோட்டியூர் நம்பி மட்டுமே அறிந்த இரகசிய மந்திரம் அது.
அந்த இரகசிய மந்திரத்தை அவரிடமிருந்து அறிந்து கொள்ள நடையாய் நடந்தார்
இராமானுஜர். மனிதர் இலேசில் பிடி கொடுக்கவில்லை. ஏறத்தாழ பதினெட்டு முறை
நடையாய் நடந்த இராமானுஜரின் மன உறுதிக்காக இறங்கி திருக் கோட்டியூர் நம் பி
ஒம் நமோ நாராயணா என்ற முக்தி மந்திரத்தை இராமானுஜரின் காதிலே இரகசியமாக
உபதேசித்து இதை நீ கடைசிவரை இன் னொருவருக்கு வெளியிடக் கூடாது, அப்படி
வெளியிடுவதாக இருந்தால், கடைசி காலத்திலே ஒரேயொருவர் காதிலே தான் இதைச்
சொல்ல வேண்டும். இதை மீறி நடந்ததால் உனக்கு நன்மை இல்லை, தீமைதான்
கிடைக்கும். சத்தியம் செய்து கொடு" என்று கேட்டார்.