இறைவனுக்கு
நைவேத்தியத்தைப் படைக்கும் போது அவனுடைய புகழ்பாடி அவனை மகிழ்வித்துப்
படைப்பதே சிறப்பாகும். யானையானது விளாம் பழத்தினுடைய சாரத்தை எவ்விதம்
புசித்து மகிழ்கிறதோ அவ்விதம் தான் எல்லாம் வல்ல இறைவனும் நைவேத்தியப்
பொருட்களை உண்டு மகிழ்கிறான். எம்பெருமானைப் போற்றித் துதிக்கும்
பாடல்களைப் பாடிப் படைக்கும் போது அவரும் மிக்க மகிழ்வுடன் ஏற்றருள்கிறார்.
நைவேத்தியத்தை மிகவும் தூய்மையான முறையில் படைத்து நாமும் நல்ல மன
அமைதியைப் பெற்றுச் சிறப்படையலாம்.
எம்பெருமான் மீது நாம் மனமுவந்து பாடும் அருள் நிறைந்த
பாடல்களைக் கேட்டு இன்புறுபவன் ஆனதினால், நல்ல இனிய பாடல்களைப்
பாடியவர்களாய் நைவேத்தியத்தைப் படைக்க வேண்டும்.