சிறுவரும் சிறுமியரும் பால கண்ணனை போலவும், அழகிய ராதையை போலவும் வேடமணிய, பிஞ்சி குழந்தையின் பாதங்கள் கண்ணன் வீட்டிற்குள் வருகைத் தருவது போல நடந்து தடம் பதிக்க, இளம் காளையர்கள் உறியடித்து வீரத்தையும், உற்சாகத்தையும் வெளிபடுத்த, கன்னிப் பெண்கள், கோலாட்டம் ஆடி, தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்த, பெற்றோர்களும், பெரியோர்களும், இதனை இனிப்பு பலகாரங்களோடு கண்டு ஆனந்தம் கொள்ள, கோலாகலமாக கொண்டாட்டம் நிறைந்திருக்கும் ஜன்மாஷ்டமி என்னும், கிருஷ்ண ஜெயந்தி (janmashtami) பண்டிகை அனைத்து வீடுகளிலும் ஒரு எதிர் பார்க்கும் பண்டிகையாக அமைகின்றது!