அபாயம் ! பள்ளி ; மாணாக்கரின் நினைவாற்றலுக்கே கல்வியில் முக்கியத்துவம் உள்ளதே தவிர அவனது அறிவை வளர்ப்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் கல்வித் திட்டத்தில் இடமில்லை. மேலை நாடுகளில்கல்விக்கூடங்கள் சிறப்பாக உள்ளனவா என்று கேட்டால் அப்படி இல்லை என்பதைத்தான் 'அபாயம் பள்ளி ' கட்டுரை விளக்குகிறது.பொதுவாகவே பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி முறைகளின் சீர்கேடு பற்றி நமக்குப் பல விஷயங்கள் தெரியும் - அதாவது வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் - 1800 -1947 வரை - குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட கல்வித்திட்டம் அதிக மாறுதல்கள் இன்றி இன்றளவும் தொடர்வது வருத்தத்திற்குறியது. மேலும் மாணாக்கரின் நினைவாற்றலுக்கே கல்வியில் முக்கியத்துவம் உள்ளதே தவிர அவனது அறிவை வளர்ப்பதற்கும் -அதனை ஆய்வு செய்வதற்கும் கல்வித்திட்டத்தில் இடமில்லை. மேலை நாடுகளில் கல்விக்கூடங்கள் சிறப்பாக உள்ளனவா -என்று கேட்டால்- அப்படி இல்லை என்பதைத்தான் 'அபாயம் !பள்ளி ' கட்டுரை விளக்குகிறது. கிளி'ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கதையின் மொழிபெயர்ப்பு. இதுவும் கல்வி பற்றியதே. இத்தொகுப்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் பற்றிய கட்டுரைகளும் - இலக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. எல்லாமே கல்வியுடன் தொடர்புடையவைதானே. இந்த நூலில் அடங்கியுள்ள எல்லாக் கட்டுரைகளிலுமே பலதரப்பட்ட பயனுள்ள தகவல்கள் தரப்பட்டுள்ளன.
- பதிப்பகத்தார்.